தமிழை சில பேரறிஞர்கள் ஏரியா ஏரியாவாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஒருவேளை இங்கு எழுதப்படுபவனவற்றை கவிதைகள் என்று கூறினால் அவர்கள் கத்தியும் கடப்பாரையும் கொண்டு வரக்கூடும். ஆகவே இதற்கு வெறும் கழுதைகள் என்று பெயரிடப்படுகிறது.
ஒரு டீ மாஸ்டர் ஒரு டீ மாஸ்டருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன ஒரு போதும் உட்கார கூடாது வியர்க்க கூடாது சொறிய கூடாது வாய் திறந்து சிரிக்கக் கூடாது அதிகம் பேசக் கூடாது வாய் திறக்காமல் வாங்க என்று தலையாட்ட வேண்டும் இதைக் கேட்ட ஒரு ஜப்பான்காரர் டீ மாஸ்டர் என்று ஒரு ரோபோ செய்தார் அது வாடிக்கையாளர்களை எடுத்த எடுப்பிலேயே த்தாயோ$ என்று விளித்தது
தவளைகள் கிணற்றுத் தவளைகள் ஊர்வலம் போக முடிவெடுத்தன முதலில் வந்தன இளையராஜா ரசிகர்கள் அடுத்தது ரஜினி ரசிகர்கள் அடுத்தது அந்த சாமியாரின் சீடர்கள் அடுத்து இயற்கை விஞ்ஞான பேரரிஞர்கள் இதைக் கேட்ட மிக மிக சினங்கொண்ட ஒரு இலக்கிய ஆளுமை அந்த கிணற்றிலிருந்து வெளியே எட்டிப் பார்த்து காறித் துப்பினார்
கருத்துகள்
கருத்துரையிடுக